
அமெரிக்காவின் வாஷிங்டன் கொயூர் டி அலின் நகரின் அருகே வனப்பகுதி ஒன்று அங்கு அமைந்துள்ளது. நேற்றிரவு 11 மணி அளவில் அந்த வனப்பகுதியில் தீடிரென தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் எரிந்த தீயை அணைத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து தீயணைப்பு துறை வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்தக் காட்டிற்குள் யாரேனும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என தேடி வருகின்றனர்.