பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, ஐயா ஐயாவாக இல்லை. ஐயா குழந்தையாக மாறிவிட்டார். அவர் கூறுவது அத்தனையும் பொய்.

ஐயாவை அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொண்டதால்தான் நான் தலைவர் பதவிக்கு வந்தேன் என கூறினார். மேலும் தெருவில் இலந்தை பழம் விற்பவர்களை அழைத்து வந்து ராமதாஸ் பதவி தருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களில் பதிவு செய்யும்போது யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவு செய்ய வேண்டாம். என்னை பற்றி இழிவாக பதிவு செய்தாலும் நயமாகவும், நளினமாகவும் பதில் அளியுங்கள் என தனது தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.