தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மற்றும் கண்விழி பதிவு போன்றவைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் அரிசிகளை பெறுவதற்கு இனி ஒரே ஒருமுறை மட்டும் கைரேகை பதிவு செய்தால் போதும் என அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு சூப்பர் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அதாவது இனி வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை சென்று வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் முதல் கட்டமாக தொடங்கப்பட இருக்கும் நிலையில் சோதனை ரீதியாக முதலில் திட்டத்தை தொடங்கி அதன் பிறகு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடத்தப்பட இருப்பதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.