
கர்நாடக சுகாதாரத்துறை பாராசிட்டமால் 650 வகை உள்ளிட்ட 14 மாத்திரை மற்றும் மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதத்தில் கர்நாடக சுகாதாரத்துறை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மாத்திரை மற்றும் மருந்துகளின் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பாராசிட்டமால் 650 வகை , பான் டி வகை உள்ளிட்ட மாத்திரைகளின் தரம் குறைவாக தயாரிக்கப்பட்டது உறுதியானது. இதனால் 14 நிறுவனங்கள் தயாரிக்கும் 14 வெவ்வேறு மாத்திரைகளுக்கு தடை விதிப்பதாக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. அவை..
- காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி
- காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி. ஆர்எல்
- மிடோ கியூ 7 சிரப்
- போமோல் 650(பாராசிட்டமால் மாத்திரை 650 மில்லி கிராம்)
- கோழிகளுக்கு செலுத்த பயன்படுத்தப்படும் எண்.டி, ஐ.பி, ஐ.பி.டி தடுப்பூசி
- பான்டோகாட்-டி.ஏ.ஆர்
- ஸ்பினிப்ளாக்ஸ் ஓஇசட் மாத்திரை
- சோடியம் குளோரைடு ஊசி ஐ.பி 0.9
- ஆல்பா லிபோயிக் சத்து மாத்திரைகள்
- பைராசிட் ஓ சஸ்பென்ஷன்
- கிளிமிஸ் 2
- அயன் (இரும்பு) சுக்ரோஸ் ஊசி யூஎஸ்பி 100 மில்லி கிராம்( இரோகெய்ன்)
- சோடியம் லேக்டேட் ஊசி ஐ.பி
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தடையை மீறி இந்த மருந்துகளை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
