
அரியானா மாநிலத்தில் உள்ள தோப் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முகநூல் மூலமாக பழகி திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் டெல்லியில் ஆரிய சமாஜத்தில் வைத்து திருமணம் செய்த நிலையில் பின்னர் திவ்யாவுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
அதாவது காவல் ஆய்வாளரான தீபக் என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இதனை அஜய் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் திவ்யாவின் நடவடிக்கைகள் நாளடைவில் தெரியவரவே அஜய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அஜய் தற்கொலை செய்து கொண்டார்.
இதில் திவ்யா நள்ளிரவு நேரத்தில் தீபக் உடன் ஒன்றாக சுற்றுவது ஆபாச நடனம் ஆடுவது என ஜாலியாக இருந்த நிலையில் அஜய் மரணத்திற்கு பிறகு அவரது செல்போனை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
அதாவது ஒரு ஹோட்டலில் தன்னுடைய கள்ளக்காதலன் முன்பு திவ்யா அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடிய நிலையில் அவரது செல்போனில் ஒரு ஆபாச வீடியோவும் இருந்துள்ளது. குடும்பப் பெண்ணான திவ்யா ஒருபோதும் இது போன்ற ஆடைகளை அணிந்து அஜய் பார்த்தது கிடையாது. இந்த வீடியோ சமீபத்தில் அஜய்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அஜய் தற்கொலை செய்துள்ளார்.
இதில் திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெறாமல் அஜயை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு தான் திவ்யா தன்னுடைய முதல் கணவனுக்கு பணம் கொடுத்து விவாகரத்து பெற்றுள்ளார். திருமணத்திற்கு முன்பாகவே திவ்யாவுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் அஜய் அவருக்கு மூன்றாவது கணவர்.
இதில் அஜய்க்கு 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்த போதிலும் தன்னுடைய மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு பண்ணையில் வேலை செய்து 1.5 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததோடு தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.
அதோடு தன்னுடைய மனைவி ஐபோன் கேட்டதால் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து அதில் கிடைத்த 1.5 லட்சம் பணத்தை வைத்து அவருக்கு iphone வாங்கி கொடுத்தார். ஆனால் திவ்யாவுக்கு அவரது சொத்துக்கள் மட்டுமே தெரிந்தது. அஜயின் சொத்து பற்றி ஒரு செயலி மூலம் தெரிந்து கொண்ட திவ்யா அதன் பிறகு அவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
முதலில் அஜயிடம் அவரது தந்தை ரன்வீரை கொலை செய்துவிட்டு சொத்துக்களை விற்பனை செய்த அந்த பணத்தை தனக்குத் தரும்படி திவ்யா வற்புறுத்திய நிலையில் அதற்கு பதிலாக நாம் சாவதே மேல் என நினைத்த அஜய் உயிரை விட்டார். அதற்கு முன்பதாக அவர் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னுடைய சாவுக்கு திவ்யா மற்றும் தீபக் ஆகியோர்தான் தான் காரணம் எனவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். தீபக்கின் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சத்தை அஜயிடமிருந்து இருந்து அபகரிக்க திவ்யா முயற்சி செய்த நிலையில் 3.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பெறுவதற்காக ஆபாச நடன வீடியோவை தன் கணவனுக்கு அனுப்பி பணத்தை தராவிட்டால் இந்த வீடியோவை பரப்பி விடுவேன் என திவ்யா மிரட்டி உள்ளார். அதன் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.