
மெக்சிகோ நாட்டின் குவானாஜூவாடோ மாகாணம், பல ஆண்டுகளாக வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதியில் ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில், அங்கு நடந்த புனித யோவானை நினைவுகூரும் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில், மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரபுவாடோ நகரில் நடந்த இந்த விழாவில் உள்ளூர்வாசிகள் நடனமாடியும், மது அருந்தியும் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் திடீரென சூடு நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்குத் தொடர்புடைய நபர்களை கண்டறிவதற்கான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. “தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நீதியின் முன் நிறுத்துவோம்” என போலீசார் உறுதியளித்துள்ளனர். இதுகுறித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், “இந்த சம்பவம் மிகவும் வேதனையானது. விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கண்டனம் தெரிவித்தார்.