
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சென்ற மாதம் நடந்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழாவில் நடிகர் விஜய் தேவர்கொண்டா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் பகல்ஹம்தாக்குதல் குறித்து விஜய் தேவரகொண்டா பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர் மோதிக்கொண்டது போன்றது காஷ்மீர்- பகஹல்காம் தாக்குதல் என கூறியிருந்தார்.
அதற்கு தெலுங்கானா பழங்குடியின அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனை அடுத்து தான் பேசியதை தவறாக புரிந்து கொண்டதாக விஜய் தேவரகொண்டா பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த லால் சவுகான் என்பவர் விஜய் தேவர கொண்டா மீது எஸ்.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது விஜய் தேவர கொண்டா மீது எஸ்சி/ எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.