
இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, கடைதொகுப்பில் ஒரு பை வாங்கும்போது நடந்த பேரம் தொடர்பான வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 74 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பயணி ஒரு நல்லி பையை வாங்க முயற்சிக்கிறார். விற்பனையாளர் முதலில் பைக்கு 550 ரூபாய் விலை கூறுகிறார். ஆனால், வெளிநாட்டவர் அதை எதிர்த்து வாதிட, விலை 500, 400, 200, 150, 100 என தொடர்ந்து குறைக்கப்படுகிறது. இறுதியில், விற்பனையாளர் 50 ரூபாயாகக் குறைத்து அந்தப் பையை தருகின்றார்.
இந்த வீடியோவை @nativety என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டிருந்தது. “இந்தியாவில் சிப்ஸ் 0.25 டாலருக்கு கிடைக்கும். ஆனால் இந்த பை 550 ரூபாயா?” என்ற கேள்வியுடன் வீடியோவை பகிர்ந்திருந்தனர். அதனுடன், ‘India is a scam’ என வெளிநாட்டு பயணியின் குறிப்பு விளக்கம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த ரீல், ஒரே நாளில் 3.45 கோடி பார்வைகள் மற்றும் 11.54 லட்சம் லைக்குகள் பெற, 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகளும் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், இந்தியர்களிடையே இந்த வீடியோ கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர், “இந்திய விற்பனையாளர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்” என கூறினாலும், பலர், “அதே பையை அவர் தன் நாட்டில் வாங்கியிருந்தால், 20 டாலருக்கும் மேலாக கொடுத்திருப்பார்” என்று பதிலளித்துள்ளனர். மற்றொரு பயனர், “இந்த பேரம் பேசும் திறமைக்கு, இந்திய மம்மிகளும் ஆட்கள் இல்லை!” என நகைச்சுவையாகக் கூறியிருந்தார். மேலும், “ஒரு CA-க்கும் இப்படி பேரம் பேச முடியாது” என்ற கருத்தும் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம், இந்தியாவில் சந்தை முறைகளின் தனித்துவத்தையும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் விளக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பேரம் பேசும் கலாசாரம், இந்தியர்களுக்கு சாதாரணமானதென்றாலும், வெளிநாட்டவர்களுக்கு ஆச்சர்யம் தரக்கூடியது என்பதும், இந்த வீடியோவின் மூலம் உறுதியாகிறது.