மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கிய நிலையில், இது உலக நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, அமெரிக்காவின் போர்விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களை துல்லியமாக தாக்கின. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமைதிப் பாதையை ஈரான் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், எஞ்சியுள்ள அனைத்தையும் அழிக்கத் தயார்” என  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் தீவிர பதிலடி எச்சரிக்கை!
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் வலுவான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. “போரத்தை அமெரிக்கா தொடங்கியிருக்கலாம், ஆனால் அதை முடிவுக்கு கொண்டு வரும் பொறுப்பு நமக்கு உண்டு” எனவும், தங்கள் மீது மேலும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு கடும் பதிலடி அளிக்கப்படும் என்றும் ஈரான் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் கூறியுள்ளனர். ஈரான் தேசிய ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் பரவலாக வெளியாகி வருகின்றன.

உலக நாடுகளில் பரவிய பெரும் பதட்டம்:
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படத் தொடங்கியதன் பின்னணியில், ரஷியா, சீனா, மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு நெருக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மற்ற நாடுகளும் இதில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது ஒரு உலகளாவிய போர் சூழலுக்கு வித்திட்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
இந்த பதட்டம் தொடர்ந்து வன்முறையாக மாறக்கூடிய அபாயம் இருப்பதால், ஐநா உள்ளிட்ட அமைப்புகள் இருதரப்புகளுக்கும் சமாதானம் தேட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய அணுசக்தி மையங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல்கள் பி-2 ஸ்டெல்த் விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன என தகவல்.
டிரம்ப் கூறியபடி, “அமைதியைத் தேர்வுசெய்யுங்கள் அல்லது பேரழிவுக்கு தயாராகுங்கள்.”
இதற்கு பதிலளிக்க ஈரான், “நாங்கள் அமைதிக்கே விரும்புகிறோம், ஆனால் எங்கள் மீது தாக்குதல் வந்தால், நாங்கள் அதை இருமடமாக திருப்பி விடுவோம்.” எனக் கடுமையாகக் கூறியுள்ளது.

இந்த மோதல் தொடர்ந்தால், அது அனைத்து நாடுகளுக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பெரும் அபாயமாக மாறக்கூடும் என உலக நாடுகள் கவலை தெரிவிக்கின்றன.