அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஓர்மண்ட் பீச் நகரத்தில் 18 மாத குழந்தை வெப்பம் அதிகமான காருக்குள்  மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தனியாக வைக்கப்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜூன் 6ஆம் தேதி நிகழ்ந்தது. குழந்தையின் தந்தையான 33 வயது ஸ்காட் ஆலன் கார்ட்னர், ஹேர்கட் செய்தவுடன் அருகிலுள்ள ஹாங்கி பாங்கி பார் லவுஞ்சில் மது அருந்தச் சென்றுள்ளார். இந்த நேரத்தில், அவருடைய மகன் செபாஸ்டியன், காருக்குள் சுமார் 3 மணி நேரம் வரை வெப்பத்தில் தவித்து, முடிவில் உயிரிழந்தான்.

விசாரணையில், கார்ட்னர் இந்த சம்பவம் குறித்து பல மாறுபட்ட மற்றும் தவறான தகவல்களை போலீசாரிடம் வழங்கியதாகவும், குழந்தையின் உடல்நிலை சோதனை செய்த மருத்துவர்கள், காருக்குள் இருந்தபோது அவரது உடல் வெப்பநிலை 111 டிகிரிக்கு (Fahrenheit) மேல் இருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். இது பற்றி  ஓர்மண்ட் பீச் காவல் துறையினர் கூறியதாவது, ஒரு அதிகாரி குழந்தையை காப்பாற்ற  முயற்சித்த போதிலும், அதற்குள் குழந்தை உயிரிழந்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.

 

இந்த விவகாரத்தில், கார்ட்னருக்கு எதிராக குழந்தையை மோசமாகக் கொன்றது மற்றும் குழந்தையை புறக்கணித்து உடல் பாதிப்பை ஏற்படுத்தியது என இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. வோலூசியா ஷெரிப் அலுவலகம் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தையின் மரணம் மக்களிடையே வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.