பாகிஸ்தானில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறிய கருத்துக்கள் வேடிக்கையாக இருந்தது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கேலியான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “எங்களுடைய பாகிஸ்தான் சைபர் வீரர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு உதாரணமாக ஐபிஎல் போட்டிகளின் போது மின்விளக்குகளை ஹேக் செய்து அனைத்து உள்ளனர்.

பின்னர் இந்திய டேம் கதவுகளையும் ஹேக் செய்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்” என கூறினார். பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நிட்டிஷன்கள் பலரும் விசாரத்தால் இயங்கும் விளக்குகளை எப்படி ஹேக் செய்வது? என கிண்டலாக விமர்சித்து வருகின்றனர். பலரும் அறிவியல் புரிதல் இல்லாமல் பேசுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.