
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தக்லைப். இந்த படத்தில் திரிஷா மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த ஐந்தாம் தேதி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் படத்தில் பாடகி தீ பாடினார். அதன்பிறகு இசை வெளியீட்டு விழாவில் அதே பாடலை சின்மயி பாடிய நிலையில் ரசிகர்கள் தீ மற்றும் சின்மயி என சண்டை போட ஆரம்பித்தனர்.
அதோடு சின்மயி மீது விதிக்கப்பட்ட தடையையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் முத்தமழை பாடலை கேட்டு தற்போது ஏ.ஆர் ரகுமான், தீ, சின்மயி ஆகியோரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஒரு பாடல் கேட்டு என் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து போய் உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது போல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இந்த பாடலை. மேலும் இது உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே அதுவும் ஏ.ஆர். ரகுமானால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.