மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பதற்றம் பெரும் வன்முறையாக மாறிய நிலையில் ஆட்சி கலைந்தது. தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வரும் நிலையில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அதாவது ஆரம்பாய் தெங்கோல் என்ற மெய்தேய் அமைப்பின் தலைவரை கைது செய்து விட்டதாக ஒரு தகவல் மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் சில  தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது பற்றி அவர்கள் கூறும் போது நாங்கள் ஆயுதங்களை திரும்ப ஒப்படைத்துவிட்டு நிவாரண பொறுப்புகளில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் எதற்காக எங்களை கைது செய்தீர்கள் என்று ஆவேசமாக கூறினார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்ட அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது பதற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு வருகிற சனிக்கிழமை இரவு வரை 5 மாவட்டங்களில் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.