பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார்.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என கூறினார். இந்த நிலையில் சென்னை அபிராமபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை முகுந்தன் சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும். அது சென்னையில் இருந்து வருமா? தைலாபுரம் தோட்டத்திலிருந்து வருமா என்பது எனக்கு தெரியாது.

பாமக யாருடன் கூட்டணி என 2,3 மாதங்களில் தெரியவரும். கூட்டணி தேசிய கட்சியோடும் இருக்கலாம். மாநில கட்சியோடும் இருக்கலாம் என கூறியுள்ளார்.