உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டா பகுதியில் உதயகுமாரி என்ற இளம் பெண் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 26 ஆம் தேதியில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் அதற்கு முன்பு ஏப்ரல் 24ஆம் தேதி திடீரென அவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில் திருடர்கள் நுழைந்துவிட்டனர்.

அவர்கள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றதோடு அவர்களை தடுத்து நிறுத்திய இளம் பெண்ணின் சகோதரர் சிவ்தினை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டனர்.

இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கடந்த எட்டாம் தேதி இந்த கொள்ளைக்கு சம்பவத்தில் ஈடுபட்ட தலைவன் கயன் சந்த் என்பவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்.

ஆனால் அதே நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் திருடப்பட்ட காலம் சகோதரன் இறந்ததாலும் உதயகுமாரியின் திருமணம் நின்றது. இதனை அறிந்த மாவட்ட எஸ்பி வினத் ஜெயஸ்வால் மணமகன் வீட்டாரிடம் பேசிய அந்த பெண்ணின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் சமாதானம் அடைந்ததால் நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு போலீசார் திருமணத்தை நடத்தி வைத்ததனர்.

இந்த திருமண செலவுக்காக எஸ்பி 1.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு முன்னதாகவும் போலீசார் கணவனை இழந்த ஒரு ஏழை பெண்ணின் மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.