டெல்லி ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் (21) என்ற கல்லூரி மாணவி, ஆங்கிலப் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்ததுடன், மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழி பயிற்சிக்கும் சென்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன், அந்த நிறுவனம் நோக்கி சென்ற நிலையில், அவர் வீடு திரும்பவில்லை. தாயின் தொலைபேசி அழைப்பில், “இன்னும் 2–3 மணி நேரத்தில் வருகிறேன்” என்று கூறிய மெஹக், அதன் பிறகு காணாமல் போனார்.

இதற்கிடையில் ஆர்ஷ்க்ரித் என்ற இளைஞரின் தந்தை, “மெஹக் என் மகனை தாக்கியதால்  என்  மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சஞ்ஜய் வனப்பகுதியில், தேடல் நடத்திய போது, சிக்கிய ஆதாரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதாவது மெஹகை ஒருதலையாக காதலித்த ஆர்ஷ்கிரித் மெஹக்கை ஏமாற்றி சஞ்சய் வனத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆர்ஷ்கிரித் இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. ஒரு தலை காதலால் ஆர்ஷ்கிரித் இளம்பெண்ணை கொலை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.