
அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட் சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று கூறினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் அவரை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். இதனால் அவர் அந்த வீடியோவை அழித்துவிட்டு மன்னிப்பும் கேட்டார். எனினும் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும், பனோலிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பயந்துபோன அவர்கள் தலைமறைவானர். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் பனோலிக்கு எதிராக புகார் அளித்த வஜாகத் கான் காணாமல் போய் உள்ளார். இது பற்றி அவருடைய தந்தை சாகத் கான் கூறியதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து அவரை காணவில்லை. பனோலி கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து செல்ஃபோன் வழியே மிரட்டல்கள் வருகின்றது என்றார். எனக்கும் அச்சுறுத்தல் அழைப்புகள் வந்தன என்று கூறினார்.
கொல்கத்தா காவல்துறையினர் பனோலி கைது செய்ததற்கு எதிராக பாஜக தலைவர்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்து மதத்திற்கு எதிராக புண்படும் வகையிலான பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார் என்று கூறியதற்கு சாகத் அவர் மதச்சார்பற்றவர். இந்துக்களை அவர் புண்படுத்தவில்லை என்றார். மகனின் சமூக ஊடகத்தின் முகப்பு பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.