இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பின் தற்போதைய தலைவராக ரோஜர் பின்னி இருக்கிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் பிசிசிஐ விதிகளின்படி 70 வயதுக்கு மேல் ஒருவர் தலைவராக இருக்க முடியாது. இதனால் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட இருக்கிறார்.

இந்நிலையில் அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதால் தற்போது துணை தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தலைவர் ரோஜர் பின்னிக்கு ஜூலை 19ஆம் தேதி 70 வயது ஆகும் என்பதால் புதிய இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.