
சென்னை திருவான்மியூர் அருகே டைடல் பார்க் அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிக்னல் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட நிலையில் அதற்குள் ஒரு கார் கவிழ்ந்து விழுந்தது.
அந்தப் பள்ளத்தில் விழுந்த காரினை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.