காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

அரு பள்ளத்தாக்கு, பொழுதுபோக்கு பூங்கா, பெடப் பள்ளத்தாக்கு பகுதிகளில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் 3 பகுதிகளிலும் போதுமான பாதுகாப்பு படையினர் இருந்ததால் தாக்குதலை தவிர்த்து உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தீவிரவாதிகள் அங்கு வந்துள்ளனர்.