ஐபிஎல் தொடரில் லக்னோவில் நடைபெற்ற  லீக் ஆட்டத்தில் மும்பை- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்தது.   தொடர்ந்து 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு  களமிறங்கிய மும்பை 20 ஓவரில் ஐந்து விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆட்டத்தில் திலக் வர்மா ரன்களை எடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதன் காரணமாக அவர் 23 பந்தில் 25 ரன் எடுத்திருந்தபோது ரிட்டையர்டு அவுட் ஆகி வெளியேறினார். இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டது குறித்தும், திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட் ஆக காரணம் என்ன? என்பது குறித்து ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது நாங்கள் தோற்றது உண்மையில் ஏமாற்றம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆடுகளத்தில் பத்து முதல் 15 ரன்கள் கூடுதலாக விட்டுக் கொடுத்து விட்டோம். நான் எப்போதுமே பந்துவீச்சை ரசித்து வீசுகிறேன். விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் செயல்படுவதில்லை. ஒரு பேட்டிங்  யூனிட்டாக நாங்கள் போட்டியை தவறவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் தோற்றுவிட்டோம்.

நாங்கள் யாரையும் தோல்விக்கு காரணம் என்று சுட்டிக்காட்ட விரும்பவில்லை. தோல்விக்கு நான் முழு காரணத்தையும் எடுத்துக் கொள்கிறேன். திலக் வர்மா ஆட்டத்திலிருந்து ரிட்டையர்டு அவுட் ஆனது குறித்து கேட்கிறீர்கள். எங்களுக்கு இறுதியில் பெரிய ஷாட்கள் தேவைப்பட்டது. இது போன்ற சில நாட்கள் வரும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது நடக்காது. நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். சிறந்த முடிவுகள் எடுங்கள். புத்திசாலித்தனமாக இருங்கள்” என்று கூறினார்.