
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி தொடர்பாக தற்போது கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மீண்டும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தாத நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அமித்ஷா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதிமுக மற்றும் பாஜக முன்பு கூட்டணியில் இருந்த நிலையில் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்ற நிலையில் அதைத் தொடர்ந்து அண்ணாமலையும் டெல்லி சென்ற நிலையில் அதன் பிறகு என்னால் யாருக்கும் எந்த பிரச்சனை வராது என்று கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் பாஜக மீண்டும் அதிமுக பதவியை ராஜினாமா செய்வேன் என்று நீங்கள் சொன்னீர்களே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் என்னுடைய நிலைப்பாட்டில் எப்போதுமே மாற்றம் கிடையாது என்று கூறினார். நான் எப்போதுமே பேச்சை மாற்றிப் பேச மாட்டேன். நான் தெளிவாக இருக்கிறேன் என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. இனிவரும் காலத்தில் அனைவரும் என்னுடைய நடவடிக்கையை பார்ப்பீர்கள். மேலும் பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று கூறினார்.