
HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷினி நாடார் மல்கோத்ரா. இவர் HCL நிறுவனத்தின் உரிமையாளர் சிவ நாடார்- கிரண் நாடார் தம்பதியினருக்கு ஒரே மகள். இவர் ஹூருன் குளோபல் என்ற அமைப்பு வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இதுவரை அமெரிக்காவை சேர்ந்த பெண்மணிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த பெண் நுழைந்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். HCL நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான ரோஷினி நாடார் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 40 மில்லியன் டாலர்.
அதாவது இந்திய மதிப்பின்படி ரூபாய் 3.5 லட்சம் கோடி. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று HCL இதன் உரிமையாளர் தமிழகத்தைச் சேர்ந்த சிவ நாடார். இவர் தனது மகளான ரோஷினி நாடாருக்கு சமீபத்தில் தனது நிறுவனமான HCL டெக்னாலஜிஸில் தன்னுடைய 47% பங்குகளை அவரது மகளின் பெயருக்கு மாற்றினார்.
அதன் மூலமே ரோஷினி நாடார் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் நுழைந்துள்ளார். ஹூருன் குளோபல் 2025 வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நபராக அதானி குடும்ப தலைவர் கௌதம் அதானி உள்ளார் இருப்பினும் அவர் இந்தியாவின் 2வது பணக்காரராகவே உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூபாய் 8.4 லட்சம் கோடியாகும். இதனை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இதனால் உலக பணக்கார பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்து அம்பானி வெளியேறி உள்ளார். இருப்பினும் ஆசியாவின் பணக்காரர் பட்டியல்களில் ஒருவராக உள்ளார். இதனை அடுத்து பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திலீப் சங்கவி இந்தியாவின் 4வது பணக்காரராகவும் இவரது சொத்து மதிப்பு ரூபாய் 2.5 கோடி, அதன் பின் விப்ரோ நிறுவனம்அசிம் பிரேம்ஜி 5வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூபாய் 2.2 லட்சம் கோடி என அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது