சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, பன்முகத்தன்மையை இந்தியாவின் பலம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். இதை தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. எண்ணிக்கை மட்டும் இல்லை. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் என கூறியுள்ளார்.