உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் பகுதியில் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் புவியியல் துறை தலைவராக ராஜநிஷ் என்பவர் இருக்கிறார். இவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததால் தற்போது கல்லூரி நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த 13ஆம் தேதி தான் இவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியர் குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்அரசு மாணவிகளுக்கு எதிரான புகார் பெட்டிகளை ஆதரிக்கும் நிலையில் இப்படிப்பட்ட குற்றங்களை மோசமான சம்பவங்களை அவர்களால் தடுக்க முடியவில்லையா.? இந்த பேராசிரியர் செய்த கொடுமைகளால் நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டேன். தயவுசெய்து மற்ற மாணவிகளை இவரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று எழுதியுள்ளார். மேலும் இது தொடர்பாக மகளிர் ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் மாணவியிடம் அத்துமீறிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.