
உலக மாஸ்டர்ஸ் லீக் 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதியபோது, யுவராஜ் சிங் மற்றும் டினோ பெஸ்ட் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 13வது ஓவருக்குப் பிறகு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமானது பின்னர் அங்கிருந்த வீரர்கள் மற்றும் அம்பயர்கள் சமாதானம் செய்யது வைத்தனர். யுவராஜ் என்றாலே அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றபோதிலும் இதுமாதிரியான சூடான விவாதங்கம் ஏற்படுவது வழக்கம்தான் .. ஆனால் என்ன அதன் பின் அவருடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிரணியில் கட்டுப்படுத்துவது மிக கடினம்.. இது அவருடைய முந்தைய நிகழ்வுகளை திரும்பி பார்த்தால் புரியும்.. யாருக்கு புரியுமோ இல்லையோ.. இங்கிலாந்து அணிக்கு நன்றாக தெரியும்..!!!
இது ஒருபுறமாக நடந்தாலும், மற்றொரு புறம் அம்பட்டி ராயுடு அரைசதம் அடித்து அணியை முன்னணியில் கொண்டு செல்ல, யுவராஜ் சிங்கும் சிறப்பாக ஆடி இந்தியா மாஸ்டர்ஸ் 149 ரன்களை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறியது.
Lafda with Yuvraj vs Tino best ☠️ #IMLT20Final #YuvrajSingh #IMLT20
— CricFreak69 (@Twi_Swastideep) March 16, 2025
“>
இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் :
இதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியின் லெண்டல் சிம்மன்ஸ் (57 off 41) மற்றும் டுவெயின் ஸ்மித் (45 off 35) சிறப்பாக ஆடியிருந்தாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களின் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினர். வினய் குமார் (3/26) மற்றும் ஷாபாஸ் நதீம் (2/12) இணைந்து முக்கியமான 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதனால் வெஸ்ட் இண்டீஸ் 148/7 என்ற குறைவான ஸ்கோரை மட்டுமே அடைய முடிந்தது. ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்த மோதலில், இந்திய அணி கட்டுப்படுத்திய சிறந்த பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.