
திருப்பதி கோவிலில் மொபைல் போன் வீடியோ கேமராக்கள் என எதற்கும் அனுமதி கிடையாது இந்த நிலையில் பிரபல யூட்யூபரான டிடிஎப் வாசன் திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இதனால் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து திருமலை தேவஸ்தான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருமலை தேவஸ்தான போலீசார் டிடிஎப் வாசனின் வங்கி கணக்கை முடக்கிவிட்டனர். இந்த தகவலை அவரது வழக்கறிஞர் முத்து கூறியுள்ளார். மேலும் டிடிஎப் வாசனுக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் முத்து கூறியுள்ளார்.