நடிகையும், இயக்குனருமான  கங்கனா ரானவத் தற்போது இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக எம்பியாக இருக்கிறார். அவ்வப்போது இவர் பேச்சுக்கள் சர்ச்சையில்  சிக்கி இணையத்தில் வைரலாவது உண்டு. கடைசியாக இவர் இயக்கி நடித்த எமர்ஜென்சி படம் வெளியானது. இந்த நிலையில் இந்திய திருமண முறை குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது,” இந்திய கூட்டுக் குடும்பங்களை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நான் வளரும் போது வீட்டை கட்டுப்படுத்த எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எப்போது வெளியே செல்ல வேண்டும் என்று கட்டளையிடாத தன் கணவரிடம் அவர் செலவழித்த ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கேட்காத ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை.

அப்பா எங்களோடு வெளியே சாப்பிட விரும்பும்போதெல்லாம் அம்மா எங்கள் அனைவரையும் திட்டுவார். ஏனென்றால் எங்களுக்காக சமைப்பது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. அதோடு உணவின் சுகாதாரம் உட்பட பல விஷயங்கள் அம்மாவால் கட்டுப்படுத்த முடிந்தது.  பாலிவுட் காதல் கதைகள் திருமண முறையை சிதைத்து விட்டது. நாட்டில் திருமணங்கள் எப்படி இருந்ததோ அப்படியே எப்போதும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.