இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிடுகிறார்கள். இதில் சில வீடியோக்கள் நகைச்சுவையை ஏற்படுத்துவது போல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு மணமகன் தன்னுடைய திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருக்கிறார்.

அப்போது டிராபிக் ஜாமில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் காரை எடுக்க முடியாத நிலையில் திருமணத்திற்கு நேரம் ஆகிவிட்டதால் அவசரமாக காரை விட்டு இறங்கி அவர் ஓடுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோவை அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Shaurya Dawar (@shourrya23)