பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம், சுமார் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இன்று முதல் நடைபெறும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனத்தின் மனிதவள துணை தலைமை அதிகாரி ஜெனல் கேல் என்பவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது குறைந்த செயல்திறன் கொண்ட 5% பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால், சுமார் 3000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்க உள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.