
தமிழ் சினிமாவில் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மனோ சித்ரா. இவர் வீரம் மற்றும் நீர்ப்பறவை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் வீரம் படத்தில் குணச்சித்திர வேதத்தில் நடித்த நிலையில் அந்த படத்தில் நடித்தது தொடர்பான அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் கூறி வேதனையை பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, வீரம் படத்தில் நடிக்கும் போது எப்படியாவது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பெரிய நடிகையாக மாறிவிட வேண்டும் என்ற கனவில் இருந்தேன். அந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்குள் பல கேள்விகள் இருந்தது. அதாவது முதலில் நடிகை தமன்னா இறந்து விடுவார் என்றும் அதன் பிறகு அஜித்துக்கு நீங்கள்தான் ஜோடி எனவும் என்னிடம் கூறியிருந்தார்கள்.
ஆனால் படத்தில் நடிக்கும் போது தான் அது பொய் என்பது தெரியவந்தது. உண்மை தெரிந்த பிறகு நான் பாதியில் வெளியேற நினைத்தேன். நான் நடிக்க மறுத்து கிளம்ப முடிவு செய்த நிலையில் படக்குழுவினர் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார்கள். நான் 2நாட்கள் மட்டும் நடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிய நிலையில் மீண்டும் இரண்டு நாட்கள் நடிக்குமாறு என்னிடம் கேட்டார்கள். நான் அஜித் சாருக்காக தான் வேறு வழியில்லாமல் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்தப் படத்தில் நடித்ததால் அதன் பிறகு தமிழ் சினிமாவில் என்னுடைய கேரியரே பாலாகி விட்டது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். அவருடைய பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.