வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ₹44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிள்ளார். கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்து பேசினார்.

அப்போது  வடச்சென்னை ஒராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும் என கூறியுள்ளார். மேலும் ஆளுநர் எல்லா பிரச்சனைகளிலும் அரசுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார். அது எங்களுக்கு நல்லதாகவே உள்ளது. அவர் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவரின் இப்போக்கு ஆட்சிக்கு சிறப்பை தான் சேர்கிறது என முதலமைச்சர் கூறியுள்ளார்.