உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் நக்லா புச்சான் பகுதி உள்ளது. இங்கு விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில் இவர் காரணம் இன்றி அடிக்கடி தன்னுடைய மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதேபோன்று சம்பவ நாளிலும் விஷ்ணு தன்னுடைய மனைவியை காரணம் இல்லாமல் திட்டிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரை அமைதியாக இருக்கும்படி மனைவி கூறினார்.

உடனே கோபப்பட்ட விஷ்ணு பாய்ந்து வந்து அவருடைய மனைவியின் உதட்டை கடித்து குதறிவிட்டார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உதட்டில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஷ்ணு மீது அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள விஷ்ணுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.