
தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது. இவர் அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் நடிகை ஹன்சிகா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ரவுடி பேபி மற்றும் காந்தாரி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், நிஷா என்ற ஒரு தெலுங்கு வெப்சீரிசிலும் நடித்த வருகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுடைய திருமணம் நடந்த 10 நாட்களில் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மற்றும் அவருடைய மனைவி முஷ்கான் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் முஸ்கான் தன்னுடைய மாமியாரும் அதாவது ஹன்சிகாவின் அம்மாவும் ஹன்சிகாவும் சேர்ந்து தன்னைக் கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ தான் விரும்பும் நிலையில் அதற்கு ஹன்சிகாவும் அவருடைய அம்மாவும் தடையாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் ஹன்சிகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.