
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். முன்னதாக அந்த தொகுதியில் அவருடைய மூத்த மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் உயிரிழந்தார். அதே தொகுதியில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது இவர் இறந்துவிட்டார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. . பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை கமலாயத்தில் நடைபெறும் மையக் குழுவில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.