தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் நேற்று நடந்த போது ஆளுநர் திடீரென வெளியேறினார் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட உடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை கண்டித்து இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று அறிவித்தனர்.

அந்த வகையில் கூறியபடி இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் ஆளுநரை கண்டித்து அனுமதி இல்லாமல் சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.