
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன் பிறகு பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்காமல் தமிழகத்தில் பல மக்கள் சிரமப்படுவதால் மத்திய அரசு தமிழக அரசு கேட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தன் கோரிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.
இதனை தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னி அரசு விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஆளுநரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலையை வைத்து டெல்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். இப்போது தமிழக வெற்றிக்கழகத்தின் விஜய் அவர்களையும் வைத்து அரசியல் செய்கிறார். ஆளுநரை அவர் 15 நிமிடங்கள் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை கண்டு கையசைத்தார். ஊடகத்திற்கு அவர் பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார். இதுதான் Elite அரசியல் என்று விமர்சித்துள்ளார்.