
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 25 வயது காதலியை 32 வயது பெண் திருமணம் செய்து கொண்டார். சிவாங்கி என்ற பெண்ணுக்கு 32 வயது ஆகிறது. இவர் நான்காண்டுகளாக ஜோதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெண்கள் என்பதால் சிவாங்கி தனது பாலினத்தை மாற்ற முடிவு எடுத்தார். அதற்காக மூன்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இன்னும் ஒரு அறுவை சிகிச்சை பாக்கி இருக்கும் நிலையில் தான் ஆணாக வாழ தொடங்கி விட்டேன் என சிவாங்கி கூறியுள்ளார். மேலும் குடும்பத்தார் முன்னிலையில் சிவாங்கி ஜோதியை திருமணம் செய்து கொண்டார். இந்த முடிவுக்கு இரு வீட்டாரும் ஆதரவளித்து திருமணத்தில் பங்கேற்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.