
கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் பேட்டை பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் துரைசாமி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். அதன் பிறகு மதுபோதையில் வீட்டிலிருந்த கிரைண்டர் மீது தடுமாறி விழுந்தார். இதனால் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது.
உடனே குடும்பத்தினர் துரைசாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே துரைசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.