இன்றைய காலத்தில் பலரும் சேமிப்பு மற்றும் முதலீட்டில் அதிக கவனம் செலுத்துகின்றனர். எதில் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்த்து அதில் முதலீடு செய்கின்றனர். நீங்களும் முதலீடு செய்ய நினைத்தால், உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நிறைய வருமானத்தை தரக்கூடிய ஒரு திட்டம் உள்ளது. அந்த திட்டம் தான் பிக்சட் டெபாசிட் .

இந்த  திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் பிக்சட் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி கொடுக்கின்றனர். ஆனால் இந்த அதிக வட்டி சில சமயங்களில், சில திட்டங்களுடன் வழங்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் இந்த பலனை சிறிது காலம் மட்டுமே பெற முடியும்.

ஆனால் ஐடி பிஐ பேங்கில் உத்சவ் என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 444 நாட்கள் டெபாசிட் செய்தால் 7.85% வட்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் இந்த திட்டத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன்பே முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 700 நாட்களுக்கு  7.70 சதவீதமும், 300 நாட்களுக்கு 7.75 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது.

இதை ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் மொபைல் பேங்க் ஆப் மூலம் முதலீடு செய்யலாம். இல்லையென்றால் நேரடியாக வங்கி கிளைக்கு சென்று விபரம் தெரிந்து கொண்டு முதலீடு செய்யலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப ஆன்லைன் மற்றும் ஆன்லைன் செயல்முறைகளை பயன்படுத்தி முதலீடு செய்து பலன் பெறலாம் . இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம்.