
இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டி முடிவடைந்த பிறகு சூரியகுமார் யாதவ் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்றும் ஒரு தலைவனாகவே இருக்க விரும்புகிறேன் என்றும் கூறினார். இந்திய வீரர்கள் அனைவரும் அதிக அளவில் தன்னம்பிக்கையும் திறமையும் வைத்துள்ளார்கள். இதனால் என்னுடைய வேலை மிகவும் சுலபமாக இருக்கிறது. மேலும் பேட்டிங் செய்யும்போது எனக்கு சிறு அழுத்தம் இருந்தது என்று கூறினார்.