இந்தியாவைப் பொறுத்த வரையில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கடனுதவி திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ. 6800 கோடியிலிருந்து 7,300 கோடியாக நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் கவரேஜ் வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை https://nha.gov.in/PM-JAY என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
