தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இம்மாத மகளிர் உரிமை தொகை நாளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில், புதிதாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் ஜூலை 10ல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால், அதன் பின்னரே புதிய நபர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.