
திருச்சி விமான நிலையத்திற்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். ஒரு பயணியை சோதனை செய்தபோது அவர் பெட்டியில் கம்பி வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 43.72 லட்ச ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் எடை கொண்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.