தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பெரும் அளவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார். இவர் தற்போது லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இவருடைய இயக்கத்தின் சார்பாக பல உதவிகளையும் செய்து வருவதால் அரசியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நேற்று தனது 78-வது பிறந்த நாளை வீட்டில் தனது மனைவி ஷோபாவுடன் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் அவரது மனைவி குழந்தைகள் என யாரும் பங்கேற்கவில்லை. அதேபோல் ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய விஜய் அப்போதும் தனது அப்பா எஸ்.ஏ.சி-யை சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விஜய் ஏன் இப்படி செய்கிறார் என அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.