மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் உடை பெரும்பாலும் பச்சை வண்ணத்திலும் நோயாளிகளுக்கு தரப்படும் துணிகளும் அதே பச்சை நிறத்தில் இருப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியுமா? 90களில் ஆரம்பத்தில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் உடை மட்டுமல்லாமல் சுவர், மெத்தை விரிப்பு, தலையணை, ஸ்கிரீன் போன்றவை வெள்ளை நிறத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தது.

அடர் சிவப்பு நிறம் நிறைந்த படத்தை ஒரு நிமிடம் உற்றுப் பாருங்கள். உடனே வெள்ளை நிறம் அதிகம் உள்ள படத்தை பாருங்கள். வெள்ளை நிறத்தில் பச்சை அல்லது நீல பச்சை நிறம் தெரியும். இது வெறும் மாயை இல்லை. இதற்கு பின்னால் உள்ள அறிவியல் தான். மருத்துவமனைகளில் பச்சை நிறம் உபயோகிக்க காரணம் ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சையின் போது நீண்ட நேரம் நோயாளியின் உடலை கையாளுவதால் ரத்தத்தின் நிறமான சிவப்பு நிறத்தை அதிக நிறம் உற்றுப் பார்க்க நேரிடும்.

இதன் காரணமாக கண்ணில் உள்ள வண்ணப் பார்வைக்கு காரணமான கூம்பு வடிவ செல்கள் உணர்வு இழக்க ஆரம்பித்து மூளையின் சிவப்பு நிற ஜமிக்கை மங்க ஆரம்பிக்கும். இதனால் மருத்துவரால் சிவப்பு நிறத்தை காண முடியாமல் போய் மனித உடல்களின் நுணுக்கங்களை காண்பது கடினமாக இருக்கும். இதனால் அவர் தனது பார்வைக்கு புத்துணர்வு தர வேண்டி சுற்றியுள்ள வெள்ளை நிறத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். உடனே பார்வையை திருப்பினால் நோயாளியின் சிவப்பு நிற உறுப்புகள் அனைத்தும் பச்சை நிறமாக தெரியும்.

வெள்ளை ஒளியில் வானவில்லின் அனைத்து நிறங்களும் இருப்பதாலும் வண்ண பார்வையில் சிவப்பு ஏற்கனவே தெரிந்துவிட்டதாலும் மூளை பச்சை நிறத்தை தூண்டி விட்டு பச்சை நிறமாக காட்டுகிறது. வண்ண சக்கரத்தில் சிவப்புக்கு எதிரான நிறம் பச்சை என்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பின் விளைவுகளை தடுப்பதற்காக அதுவரை மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்த வெள்ளை நிறத்திற்கு பதிலாக பச்சை, இளம் பச்சை மற்றும் நீலப்பச்சை நிறங்கள் பயன்படுத்த தொடங்கினர்.

இந்த ஏற்பாடு 1917 களில் தொடங்கி இரண்டாம் உலகப் போருக்கு பின் பரவலாகியது. அது மட்டுமல்லாமல் பச்சை நிறம் இயற்கை நிறமாகவும் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதால் நோயாளிகளின் மனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தரும். எனவே தான் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உடை பச்சை வண்ணத்தில் உள்ளது.