ஜப்பானைச் சேர்ந்த தகாஹிரோ ஷிராயிஷி (வயது 34) என்பவர், 2017 ஆம் ஆண்டு ஒன்பது பேரை கொன்ற கொடூரமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவரால் கொல்லப்பட்டவர்களில் எட்டுபேர் இளம் பெண்கள், ஒருவர் ஆணாக உள்ளார். இவர்கள் அனைவரும், சமூக வலைதளமான ட்விட்டரில் தற்கொலை செய்ய விருப்பம் உள்ளதாக பதிவிட்டவர்கள் ஆவார்கள். இதைப் பார்த்த ஷிராயிஷி, “உங்களுடைய வாழ்க்கையை முடிக்க உதவுகிறேன்” என்று ஆசை வார்த்தைகளால் நம்பவைத்து, தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், அவர்கள்  அனைவரையும் கொலை செய்துள்ளார். குறிப்பாக அவர் பெண்கள் 8 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்து துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

ஜப்பானின் நீதித்துறை அமைச்சர் கேஸுகே சுஸுகி கூறுகையில், “தனது காம நலன் மற்றும் பண தேவையை பூர்த்தி செய்யவே, ஷிராயிஷி இந்த கொடூரங்களை செய்தார். அவர் பெண்களை தனது வீட்டிற்கு அழைத்து, அழுத்தமாக தாக்கி, கழுத்தை நெரித்து, பின்னர் பாலியல் வன்முறை செய்தார். எட்டுப் பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அவரது ஜப்பானின் ஜாமா பகுதியில் உள்ள வீட்டில் பல குளிரூட்டும் பெட்டிகளில் வைத்திருந்தார். மரணம் தரும் நாற்றத்தை தடுக்க மனித கழிவுப்பொடி (cat litter) பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் கூறினர்,” எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் 2017-ஆம் ஆண்டு அம்பலமானது. 15 வயதுடைய ஒரு சிறுமி காணாமல் போன நிலையில் , அவரது சகோதரர் அவரது ட்விட்டர் கணக்கை சோதித்தார். அங்கு ஷிராயிஷியுடன் உரையாடிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, ஒன்பது பேரின் எலும்புகள் மற்றும் உடலின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் மூன்று பேர் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஒரு பெண்ணின் காதலனையும் அவர் கொலை செய்துள்ளார். காரணம், தன்னை போலீசிடம் ஒப்படைக்கலாம் என்ற பயம் தான்.

இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2025) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜப்பானில் இது 2022-இற்கு பிறகு முதல் மரண தண்டனை ஆகும். ஜப்பானிலும், அமெரிக்காவிலும் மட்டுமே G7 நாடுகளில் மரண தண்டனை தற்போது நடைமுறையில் உள்ளது. ஜப்பானில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பிறகு  அது தொடர்பாக சில மணி நேரத்திற்கே முன்னதாகவே தகவல் அளிக்கப்படுகிறது. அவரின் குடும்பத்தினருக்கும் எந்தவிதமான தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. அனைத்து மரணத் தண்டனைகளும் தூக்கிலிடுதலாகவே அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தூக்குத் தண்டனை குறித்த செய்தி வெளியாகியதும், ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “மரண தண்டனை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. இது குற்றங்களைத் தடுக்கும் ஒரு நிரூபிக்கப்பட்ட வழியாக இல்லை. தவறான தீர்ப்புகள் நடந்துவிட்டால், அதை திருத்த முடியாத நிலை ஏற்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. உலகளவில் மரண தண்டனையை முழுமையாக நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு முறை அந்த நபரின் மரண தண்டனை ரத்தான நிலையில் தற்போது அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.