
பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது, புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பம், பாரம்பரியத்தை உள்ளடக்கியது.
புதிய ரயில் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைக்கு பெரிதும் பயனளிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது . நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு நமது உட்கட்டமைப்புகளே முக்கிய காரணம்.
தமிழ்நாட்டுக்கான நிதியை பல மடங்கு அதிமாக வழங்கியுள்ளோம். ரயில்வே திட்டங்களுக்கான நிதியை 7 மடங்கு அதிகமாக வழங்கியுள்ளோம். இவற்றையெல்லாம் செய்தும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள் என கூறியுள்ளார். தற்போதைய ரயில்வே பட்ஜெட்டில் 6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.