திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் டூ பெருந்துறை சாலையில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை புதிய அரசின் அதிரடி உத்தரவால் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. மாலை 6 மணி ஆகிவிட்டாலே குடிகாரர்களின் தொல்லையால் அந்த வழியே வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வந்த மாணவிகளும், அப்பகுதிப் பெண்களும் இந்த நடவடிக்கையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். கடை மூடப்பட்டதைத் தொடர்ந்து, தங்களது நீண்ட நாள் துயரத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளதாகப் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
குன்னத்தூர் to பெருந்துறை ரோடு girls higher secondary school பக்கத்துல இருக்குற டாஸ்மாக் மூடியாச்சு 👌👌
அதனால First டைம் நாங்க freedom ah நடக்கிறோம் 💥💥🔥🔥
Thank CM sir ❤️🔥❤️🔥❤️🔥 pic.twitter.com/1urNsFYEZy
— கோடீஸ்வரன் (@KodeeswaRaja_) May 15, 2026
இது குறித்து அப்பகுதிப் பெண்கள் ஒன்று சேர்ந்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் இப்போதுதான் முதல் முறையாக நாங்கள் பயமில்லாமல், முழு சுதந்திரத்தோடு ரோட்டில் நடந்து போகிறோம்; சொன்னதைச் செய்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த புதிய அரசின் இந்த அதிரடி ஆக்ஷன் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
