மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டு காலமாக கிளர்ச்சியாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குக்கி மற்றும் மெய் தேய் இனக் குழுவினர்களுக்கு இடையே அரசு அந்தஸ்து குறித்து இந்த கலவரம் தொடங்கியது. இதில் கிறிஸ்தவ பெண்கள் பலர் பாலில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது சம்பவ நாளன்று 13 பேர் ஜிர்பாம் பகுதியில் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று குழந்தைகள், இருவர் உட்பட மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியான. மேலும் இரண்டு முதியவர்கள் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டதாகவும் அவர்களது உடல்களை காவல்துறையினர் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால்  நடைபெறும் அபாயம் கருதி பாதுகாப்பு குழுவினர் களத்தில் இறங்கி கலவரக்காரர்களிடம் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர். இதில் 10 கலவரக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மத்திய அரசு மணிப்பூருக்கு கூடுதலாக 20 ஆயுத காவல் படை அனுப்பி உள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் இதனை கட்டுக்குள் கொண்டு வர 2000 வீரர்களை மத்திய அரசு மணிப்பூரில் களம் இறக்கியுள்ளது. இந்த அவசரகால ஆணை மணிப்பூரின்  நிலைமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.